காற்றின் முகிழ்ப்பில்
சில்லிட்ட கல்லீரல்
மௌனத்தின் சுவாசிப்பில்
தெறித்த த்வனிகள்
சூல்கொண்ட இருளில்
ஓடிக்களைத்த குதிரைகளாய்
முணுமுணுப்புகளின் பேரொலிகள்
எரிந்த கானத்தில்
சாம்பல் கரங்கள்
குரல்வளை நெரிக்க
தரைதட்டி நின்றன
பாய்மரப் படகுகள்
காலம் கிழித்து
பாலம் உடைத்து
சிதறின ஆடுகள்
நனைந்த ஓநாய்கள்
குறுதிச் சேற்றில்
இரத்தச்சகதி பொங்க
சலனமற்ற நிர்வாணங்களாய்
பெருமூச்சுகளின் ஜ்வலிப்புகள்
பிரளய தரிசனத்தின்
ருத்ர அவதாரத்தில்
காட்சிகள் கலகலக்க
சாட்சிகள் சல்லடைகளாய்...
இரைச்சலில் அடங்கிய
ஒற்றை ஒலியாய்...
கரைச்சலில் உயிர்த்தெழுந்த
கற்றாழையாய்.....
பூமி மீண்டும் குலுங்க
செத்துப் பிழைத்தது மனிதம்
.................................................
கொத்துப் பரோட்டா புனிதம்
பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள்
அன்றி வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....
சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!
பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!
இன்றொரு "கவிதை" செய்ய
இதுவே ஆதி சூத்திரம்
என்கிறார் நண்பர் ஒருவர்
எனது எதிர்வினை கண்டு
பாதி சூத்திரமாகவேனும்
ஏற்க வேண்டுமெனநெருக்குகிறார்...
அவர் ஏகடியம் பேசுகிறார்
எனக்குப் புரிகிறது....
உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்....
புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
...................................................சுகதேவ்
நன்றி: தமிழ்.சிஃபி. இணைய இதழ்
சில்லிட்ட கல்லீரல்
மௌனத்தின் சுவாசிப்பில்
தெறித்த த்வனிகள்
சூல்கொண்ட இருளில்
ஓடிக்களைத்த குதிரைகளாய்
முணுமுணுப்புகளின் பேரொலிகள்
எரிந்த கானத்தில்
சாம்பல் கரங்கள்
குரல்வளை நெரிக்க
தரைதட்டி நின்றன
பாய்மரப் படகுகள்
காலம் கிழித்து
பாலம் உடைத்து
சிதறின ஆடுகள்
நனைந்த ஓநாய்கள்
குறுதிச் சேற்றில்
இரத்தச்சகதி பொங்க
சலனமற்ற நிர்வாணங்களாய்
பெருமூச்சுகளின் ஜ்வலிப்புகள்
பிரளய தரிசனத்தின்
ருத்ர அவதாரத்தில்
காட்சிகள் கலகலக்க
சாட்சிகள் சல்லடைகளாய்...
இரைச்சலில் அடங்கிய
ஒற்றை ஒலியாய்...
கரைச்சலில் உயிர்த்தெழுந்த
கற்றாழையாய்.....
பூமி மீண்டும் குலுங்க
செத்துப் பிழைத்தது மனிதம்
.................................................
கொத்துப் பரோட்டா புனிதம்
பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள்
அன்றி வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....
சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!
பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!
இன்றொரு "கவிதை" செய்ய
இதுவே ஆதி சூத்திரம்
என்கிறார் நண்பர் ஒருவர்
எனது எதிர்வினை கண்டு
பாதி சூத்திரமாகவேனும்
ஏற்க வேண்டுமெனநெருக்குகிறார்...
அவர் ஏகடியம் பேசுகிறார்
எனக்குப் புரிகிறது....
உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்....
புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
...................................................சுகதேவ்
நன்றி: தமிழ்.சிஃபி. இணைய இதழ்
12 comments:
வணக்கம் சுகதேவ்
இதென்ன கவிதை?
வரும்போதே கலாய்ச்சல் கவிதையா??
நல்வரவு வலைப்பதிவுலகுக்கு
வாங்க அடிக்கடி எழுதுங்க வருசத்துக்கொரு பதிவு தானே இருக்கு
ஊரோடி பகீ
Welcome to blogging Sugadev. Nalamaa? Please write continuously.
- PK Sivakumar
நல்ல கவிதை!
//கொத்துப் பரோட்டா புனிதம்
பிரபல முன்-பின்
நவீன படைப்பாளிகள் அன்றி
வாசகர்கள் யாரேனும்
மேற்கண்ட வரிகளுக்கு
கவிப் பொருள் கண்டால்
அல்லது கொண்டால்
நான் பொறுப்பல்ல.....
//
:))
//சகட்டு மேனிக்கு
கோர்த்த வார்த்தைகளின்
கலையாத மடிப்பு இது!
பச்சையாகச் செப்பினால்
ஒரு கவிதைப் பாசாங்கு!
//
அட! நம்மள மாதிரிதானா நீங்களும்?
//உங்களுக்கு...?
அடடா! ஏன் விரைகிறீர்கள்?
நான் சீரியஸாக பேசுகிறேன்
புரிகிறது...
இப்படித்தான் நானும்
வேகமாக, அதிவேகமாக
விரைந்திருக்கிறேன்...!
//
:))
மிகவும் ரசித்தேன்! இந்த வரிகளை!
//கொத்து பரோட்டா, பின் நவீனத்துவம், கவிப்பொருள்//
அண்ணா, நம்மளை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே?!
//அண்ணா, நம்மளை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே?!
//
:))
கொத்ஸ்! க.க.க.போ!
பகீ, பிகேஎஸ் நல்லவேளை
யாரும் வரலையோன்னு பார்க்க வந்தேன்.சரி ரெஸ்பான்ஸ் இருக்குன்னு
இங்க வந்து பார்த்த பிறகு தெரியுது:-)
சிபி, கொத்ஸ்
வந்தவுடனே ஆரம்பிச்சாச்சா
பாவங்க சுகதேவ்
இந்த ஆட்டமெல்லாம் இன்னும் அவருக்குத் தெரியாது.
சிபி கலாய்த்தல்திணை ஆரம்பிச்சாச்சா
கொத்ஸ் காலடி எடுத்து வெச்சாச்சு.இனி
50 ஆ, 100 ஆ பார்க்கலாம்.
I wish to express my thanks to Madhumitha, PKS, Bahee, Namakkal Sibi and Ilavasa Kotthanar for immediate response and encouragement. I will interact with all of you frequently in future.
Sugadev
//இந்த ஆட்டமெல்லாம் இன்னும் அவருக்குத் தெரியாது.
//
கத்துக்குடுத்திட்டா போச்சு!
நல்லாத்தான் இருக்கு சுகு...
தொடர்ந்தால் நலம்
நல்லாத்தான் இருக்கு சுகு...
தொடர்ந்தால் நலம்
Post a Comment